×

புஞ்சை புளியம்பட்டி சந்தையில் 1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

 

சத்தியமங்கலம்,மே5: புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையானது. ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விற்க வருகின்றனர். நேற்றைய சந்தைக்கு 30 எருமைகள், 150 கலப்பின மாடுகள், 100 கன்றுகள் 200 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எ

ருமைகள் ரூ.18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு ரூ.24 ஆயிரம் முதல் 42 ஆயிரம் ரூபாய், ஜெர்சி ரூ.22 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம், சிந்து ரூ.16 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம், நாட்டுமாடு 72 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. வளர்ப்பு கன்றுகள் ரூ.6000 முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று 7 ஆயிரம் ரூபாய் வரையும், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 6500 ரூபாய் வரையும் விற்பனையானது.

கர்நாடக,கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச்சென்றனர். கடந்த சில வாரங்களாக சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைவாக இருந்ததாகவும், தற்போது பரவலாக மழை பெய்துள்ளதால் இந்த வாரம் கறவை மாடு, கன்றுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சந்தை துவங்கிய நிலையில் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் சந்தை துவங்கிய நான்கு மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post புஞ்சை புளியம்பட்டி சந்தையில் 1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Punjai Puliambatti market ,Sathyamangalam ,Punjai Puliambatti Livestock Market ,Erode District ,Punjai ,Puliambatti ,Punjai Puliambatti ,Market ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை